search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா அரசு"

    • ஹலோ என்ற சம்பிரதாய வார்த்தை மேற்கத்திய கலாச்சாரம்.
    • மகாத்மா காந்தி கூட வந்தே மாதரத்தை ஆதரித்தார்.

    மும்பை:

    மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளதாவது:

    உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளின் போது அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், "ஹலோ" என்பதற்குப் பதிலாக "வந்தே மாதரம்" என்று தெரிவிக்க வேண்டும். அரசுத் துறைத் தலைவர்கள் தங்கள் ஊழியர்களை அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும். "ஹலோ" என்ற சம்பிரதாய வார்த்தை மேற்கத்திய கலாச்சாரத்தை சித்தரிக்கிறது. அதற்கு எந்த உணர்வும் இல்லை.

    வந்தே மாதரம் என்றால், நாங்கள் எங்கள் தாய்க்கு தலைவணங்குகிறோம் என்று பொருள். எனவே, பொதுமக்களும் "ஹலோ" என்பதற்குப் பதிலாக வந்தே மாதரம் என்று சொல்லுங்கள். சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி கூட வந்தே மாதரத்தை ஆதரித்தார்.

    வந்தே மாதரம் கூட கட்டாயமில்லை. 'ஜெய் பீம்' அல்லது 'ஜெய் ஸ்ரீ ராம்' என்றும் சொல்லலாம், தங்கள் பெற்றோரின் பெயரைக் குறிப்பிடலாம். ஆனால் தொலைபேசி அழைப்பைப் பெறும்போது ஹலோ சொல்வதை தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே, விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், "ஜெய் பலிராஜா" ( (விவசாயிக்கு வாழ்த்துக்கள்) மற்றும் "ராம் ராம்" என்ற வார்த்தைகளை பயன்படுத்துமாறு காங்கிரஸ தொண்டர்களை மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

    நமது நாடு விவசாயப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் போது 'ஜெய் பலிராஜா', 'ராம் ராம்' என்று சொல்வோம் என்பதே எங்களது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டார்.

    உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 5 மாணவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. #Everest #MahaGovt
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஆஷரம்ஷாலாஸ் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி சிகரத்தில் ஏற தொடங்கினர். ஆனால் அவர்களில் 5 மாணவர்கள் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தனர். மீதி 5 பேர் பயணத்தை முடிக்கவில்லை.


    இந்நிலையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த உமாகந்த் மகாவி, பர்மேஷ் அலே, மனிஷா துர்வே, கவிதாஸ் காத்மோட் மற்றும் விகாஸ் சோயம் ஆகிய 5 மாணவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் மற்றும் போலீசில் பணி வழங்கப்படும் என மாநில நிதி மந்திரி சுந்தீர் முகந்திவார் தெரிவித்தார். மற்ற 5 மாணவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபா வழங்கப்படும் என அறிவித்தார்.

    நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்தார். #Everest #MahaGovt
    ×